Wednesday, April 10, 2013

கோடையை சமாளிக்க சிறந்தது!

 
(பார்க்கும் போதே கூல இருக்குல)
கோடையை சமாளிக்க தயிரை விடச் சிறந்தது மோர். மோர் ஆகக் கடைந்து குடியுங்கள் சளி பிடிக்காது. மோர் சிறந்த பிணிநீக்கி.

எத்தனைதான் கலர்க்கலரான குளிர்பானங்கள் மார்கெட்டில் வந்தாலும், இரசாயனம், செயற்கை சுவை மற்றும் நிறம் (Artificial flavour, Artificial colour) கலக்காத இந்த நீர்மோருக்கு அவையெல்லாம் இணையாகுமா? வெண்ணெய்ச்சத்து சிலுப்பி நீக்கப்பட்ட இந்த நீர்மோர் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், ஜீரண சக்தியை அதிகரிக்கவல்லது. பசியின்றி வயிறு ‘திம்மென்று’ இருக்கும்போது இஞ்சி கலந்த இந்த நீர்மோரை ஒரு டம்ளர் பருக அரைமணி நேரத்தில் நல்ல பசியைத் தூண்டிவிடும். கோடைகாலத்தில் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு குளுகுளுவென மோர் கொடுத்து உபசரிப்பது நம் தமிழர்களின் பண்பாட்டில் ஒன்றல்லவா? மோரில் பொட்டசியம், வைட்டமின் B12, கால்சியம், ரிபோப்ளேவின் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்துள்ளது. நீர்மோர் நான்கு வித்தியாசமான சுவைகள் (புளிப்பு, உப்பு, காரம், துவர்ப்பு) அடங்கியது. மலிவானது. எங்கள் ஊரில் வெயில் காலத்தின்போதும், கோவில் திருவிழா நேரங்களிலும் அமைக்கப்படும் தண்ணீர் பந்தலில் பொதுவாக நீர்மோரும், பானாக்கமும் வழங்குவார்கள். இந்த இரண்டு பானங்களில் அறுசுவையும் அடங்கிவிடும். அறுசுவை உணவு நமது உடலில் சேரும்போது உடல் கொண்ட மொத்த களைப்பும் நீங்கி தனி புத்துணர்ச்சி கிடைத்துவிடும். மோர் தயாரிக்க..

தேவையான பொருட்கள்:

தயிர் – 1/2 கப்
தண்ணீர் – 1 ½ கப்
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு (பொடியாக நறுக்கியது.)
மல்லித்தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது.)
இஞ்சி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது.)
பச்சைமிளகாய் – அரைமிளகாய் அளவு- 2 கப் மோருக்கு. (காரம் உங்கள் தேவைக்கேற்ப கூட்டியோ, குறைத்தோ சேர்த்துக் கொள்ளவும்.)
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

ஒரு பெரிய பாத்திரத்தில் தயிரை ஊற்றவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து தயிர் கடையும் மத்து கொண்டு சிலுப்பிவிடவும். கட்டிகள் இல்லாமல் தயிர் நன்றாக கரைந்துவிடும். தயிரில் இருக்கும் வெண்ணெய்ச் சத்தும் தனியே பிரிந்துவிடும். இதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழை, இஞ்சி, பச்சைமிளகாய் தேவையானஅளவு உப்பு சேர்த்து கலக்கவும். சுவையான இந்த நீர்மோரை டம்ளரில் ஊற்றி பருக அல்லது சாதத்துடன் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

குறிப்பு:

வெயில் காலத்தில் மோர் நிறைய தயாரித்து ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கு தண்ணீருக்கு பதிலாக மோர் கொடுக்கலாம். உடல் சூட்டை தணிக்கும்.
  1. கோடை காலத்தில் ப்ரிட்ஜில் வைத்தாலும் மோர் புளித்துவிடும். அதற்குத் தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை அந்த மோர் தீரும்வரை, மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசிவரைக்கும் புளிக்காமல் இருக்கும்...!!!!!

Thursday, April 4, 2013

தந்தை-மகன்


ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?

4 வயதில்-
என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை.

6 வயதில்-
என் அப்பாவுக்கு எல்லோரையுமே தெரியும்.

10 வயதில்-
என் அப்ப நல்ல அப்பாதான். ஆனால் அவருக்கு அடிக்கடி கோபம் வருகிறது..

12 வயதில்-
ஹும்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பா என் மீது பாசமாக இருந்தார்.

14 வயதில்-
என் அப்பா தான் எல்லா விஷயத்தையும் சரியாகச் செய்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்.

16 வயதில்-
அப்பா அந்த காலத்து மனிதர். லேட்டஸ்ட் விஷயங்களே தெரிவதில்லை.

18 வயதில்-
அப்பா ஏன் இப்படி பல சமயங்களிலும் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறார்?

20 வயதில்-
அப்பாவுடன் இருப்பதே கஷ்டமாக இருக்கிறது. அம்மா எப்படித்தான் இவரை சகித்துக்கொள்கிறாரோ?

25 வயதில்-
என் அப்பாவுக்கு என்ன ஆச்சு? நான் என்ன செய்தாலும் அதை எதிர்ப்பதையே முதல் காரியமாகச் செய்கிறாரே?

30 வயதில்-
என் மகனை சமாளிப்பது பெரியகஷ்டம்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பாவுக்கு எத்தனை பயந்து நடந்தேன்?

40 வயதில்-
ஹும்! அந்த காலத்தில் என் அப்பா என்னை அத்தனை ஒழுக்கத்தோடு வளர்த்தார். நானும் என் மகனை அப்படித்தான் வளர்க்க வேண்டும்!

45 வயதில்-
குழந்தைகளை-அதுவும் டீன் ஏஜ் குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கஷ்டம். என்னை அப்பா எப்படித்தான் சமாளித்தாரோ

50 வயதில்-
எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் என் அப்பா எங்கள் எல்லோரையும் நன்றாக வளர்த்தார். எனக்கு ஒரு மகனையே ஒழுங்காக வளர்க்கத் தெரியவில்லை.

55 வயதில்-
என் அப்பா ஒரு தீர்க்கதரிசி. தனித்துவம் மிக்கவர்.

60 வயதில்-
என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை!

முதல் நிலைக்கு திரும்பவும் வருவதற்கு ஒரு மகனுக்கு 56 வருடங்கள் பிடித்திருக்கிறது. நல்ல வேளையாக உங்களுக்கு அத்தனை வயது ஆகவில்லையெனில், ஏன் தாமதிக்கிறீர்கள்? உடனடியாக உங்கள் அப்பாவுக்கு ஒரு ஃபோன் செய்து அவரை நீங்கள் மிகவும் நேசிப்பதாகச் சொல்லுங்கள்...

நன்றி;முக நூல் 

Wednesday, April 3, 2013

உற்சாகத்துக்கு அவ்வளவு வலிமை...!



திருடன் ஒருவன் சர்க்கஸ் பார்க்கப் போனான்.அதில் ஒரு நிகழ்ச்சி அவனைக் கவர்ந்தது.ஒரு வளையத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது.ஒருவன் பாய்ந்து வந்து அந்த வளையத்துக்குள் பாய்ந்து வெளிவந்தான்.

நிகழ்ச்சி முடிந்ததும் திருடன் அவனைப் பார்த்து,''இங்கு உனக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கிறதோ அதைப்போல ஐந்து பங்கு தருகிறேன்.நீ என்னுடன் வா,''என்று கூற அவனும் சரியென்று கிளம்பினான். பின் அவனுக்குத் தனது தொழில் பற்றிக் கூறிவிட்டு முதல் முறையாக அவனை அழைத்துக் கொண்டு ஒரு வீட்டிற்குத் திருடப் போனான்.

அங்கு சுவற்றில் கன்னம் வைத்தான்.பின் சர்க்கஸ்காரனிடம் அந்த துவாரத்துக்குள் பாய்ந்து உள்ளே சென்று பொருட்களை எடுத்துக் கொண்டு வரச்சொன்னான். அந்த துவாரத்தின் உயரம் கிட்டத்தட்ட சர்க்கஸில் இருந்த வளையத்தின் உயரத்திற்கே இருந்தது.இருந்தாலும் அவன் உடனே செயல்படவில்லை.

அவன் தயங்கியவாறு நின்றிருந்தான்.திருடன் காரணம் கேட்க அவன் சொன்னான்,''அய்யா,என்னைத் தவறாகஎடுத்துக் கொள்ளாதீர்கள்.என்னால் இது முடியாது.சர்க்கஸில் என்னைச்சுற்றி ஆயிரக்கணக்கானோர் இருந்து என்னை உற்சாகப் படுத்திக் கொண்டிருப்பர்.அவர்கள் தரும் உற்சாகத்திலேயே நான் அந்த வளையத்துக்குள் பாய்ந்து விடுவேன்.அந்த சூழல் இங்கு இல்லை.எனவே என்னால் இங்கு துவாரத்துக்குள் நுழைவதை எண்ணிக்கூடப் பார்க்க முடியவில்லை.

அடுத்தவர் தரும் உற்சாகத்துக்கு அவ்வளவு வலிமை...!

நன்றி; முக நூல் 

பவர் ஸ்டாருனா சும்மா அதிரனும்ல...


பவர்ஸ்டார் ஒரு முறை மு‌ம்பை‌யி‌ல் உ‌ள்ள அலுவலக‌ம் ஒ‌ன்‌றி‌ல் அலுவலக பணியாளராக (‌பியூ‌ன்) ப‌ணியா‌ற்‌றி‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ர்.அவ‌ரிட‌ம் ஒரு கெ‌ட்ட பழ‌க்க‌ம் இரு‌ந்தது. அதாவது யாராவது, ஒருவரை‌ப் ப‌ற்‌றி பே‌சி‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ல், நடு‌‌வி‌ல் புகு‌ந்து, ஓ... அவரா? அவரை என‌க்கு தெ‌ரியுமே எ‌ன்று கூறுவா‌ர்.

ஒரு முறை அ‌ந்த அலுவலக‌த்‌தி‌ன் மேல‌திகா‌ரி (அமெ‌ரி‌க்கா‌வில் ‌பிற‌ந்து வள‌ர்‌ந்தவ‌ர்) ஆ‌‌ர்னா‌ல்‌ட் ப‌ற்‌றி பே‌சி‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ர். உடனே எ‌ப்போது‌ம் போல நமது பவர்ஸ்டார், ஓ ஆ‌ர்னா‌ல்‌டா அவ‌ர் எ‌ன்னோட ந‌ண்பரா‌ச்சே எ‌ன்று கூ‌றினா‌ர்.இதை‌க் கே‌ட்ட முதலா‌ளி‌க்கு‌‌ சி‌ரி‌ப்பு வ‌ந்து‌வி‌ட்டது. எ‌ன்ன ஆ‌‌ர்னா‌ல்டை உன‌க்கு‌த் தெ‌ரியுமா? ச‌ரி அடு‌த்த முறை நா‌ன் அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கு‌ப் போகு‌ம்போது உ‌ன்னையு‌ம் அழை‌த்து‌ச் செ‌ல்‌கிறேன். உன‌க்கு ஆ‌ர்னா‌ல்டை தெ‌ரியுமா இ‌ல்லையா எ‌ன்பைத அ‌ப்போது பா‌ர்‌க்‌கிற
ே‌ன் எ‌ன்று கூ‌றினா‌ர்.அத‌ற்கு பவர்ஸ்டாரும் ஒ‌‌ப்பு‌க் கொ‌ண்டு தலையசை‌த்தா‌ர்.

முதலா‌ளி சொ‌ன்னபடியே பவர்ஸ்டாரை அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கு அழை‌த்து‌ப் போனா‌‌ர். ‌பிறகு ஆ‌ர்னா‌ல்டி‌ன் ‌வீ‌ட்டி‌ற்கு‌ அழை‌த்து‌ச் செ‌ன்றா‌ர். ஆ‌ர்னா‌ல்‌ட் பவர்ஸ்டாரை பா‌ர்‌த்தது‌ம் ஓடி வ‌ந்து "ஹா‌ய் பவர்... எ‌வ்வளவு நாளா‌ச்சுடா உ‌ன்ன பா‌ர்‌த்து... எ‌ங்கடா போன இ‌வ்வளவு நாளா" எ‌ன்று கே‌ட்டவாறு அவரை உ‌ள்ளே அழை‌த்து‌ச் செ‌ன்று தே‌னீ‌ர் ‌விரு‌ந்து அ‌ளி‌த்தா‌ர்.அதுவரை வாச‌லி‌ல் ‌நி‌ன்‌றிரு‌ந்தா‌ர் அ‌தி‌ர்‌ச்‌சியடை‌ந்த முதலா‌ளி. ‌பி‌ன்ன‌ர் பவர்ஸ்டார் வ‌ந்தது‌ம், ‌

ஒபாமா ‌வீ‌ட்டி‌ற்கு அழை‌த்து‌ச் செ‌‌ன்றா‌ர். ‌ஒபாமாவும் ஆ‌ர்னா‌ல்டை‌ப் போலவே பவர்ஸ்டாரை க‌ட்டி அணை‌த்து‌க் கொ‌ண்டு, "ஒரு கா‌பியாவது குடி‌‌த்து‌வி‌ட்டு‌ப் போ" என வ‌ற்புறு‌த்‌தினா‌ர்.இதை‌ப் பா‌ர்‌த்து அ‌தி‌ர்‌ச்‌சி‌யி‌ல் உறை‌ந்தே போனா‌‌ர் முதலா‌ளி.

கடை‌சியாக வாடிகனு‌க்கு பவர்ஸ்டாரை அழை‌த்து‌ப் போனா‌‌ர் முதலா‌ளி. அ‌ங்கு ம‌க்க‌ள் கூ‌ட்ட‌ம் அலை மோ‌தியது. அ‌ந்த கூ‌ட்ட‌த்‌தி‌ல் உ‌ள்ளே நுழைவது ‌மிக‌க் கடினமான ‌விஷயமாக இரு‌ந்தது. எனவே பவர்ஸ்டார்
தனது முதலா‌ளி‌யிட‌ம் "கொ‌ஞ்‌ச‌ம் இ‌ங்கேயே இரு‌ங்க‌ள். நா‌ன் போ‌ய் வரு‌கிறே‌ன்" எ‌ன்று கூ‌றி‌வி‌ட்டு‌ச் செ‌ன்றா‌‌ர்.‌
சி‌றிது நேர‌த்‌தி‌ல் வாடிக‌ன் மா‌ளிகை‌யி‌ன் பா‌ல்க‌னி‌யி‌ல் இரு‌ந்து போ‌ப்‌பி‌ன் கைகளை ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டு பவர்ஸ்டார் தோ‌ன்‌றினா‌ன்.‌அ‌வ்வளவுதா‌ன் வாச‌லி‌ல் ‌நி‌ன்று இதனை‌ப் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த முதலா‌ளி மய‌ங்‌கி ‌விழு‌ந்தா‌ர். அவரை உடனடியாக மரு‌‌த்துவமனை‌க்கு‌க் கொ‌ண்டு செ‌ன்று ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌த்த ‌பி‌ன் பவர்ஸ்டார், எ‌ன்ன ஆ‌னது உ‌ங்களு‌க்கு? எ‌ன்று கே‌ட்டா‌ர்.

அத‌ற்கு முதலா‌ளி, "ஆ‌ர்னா‌ல்டை உன‌க்கு‌த் தெ‌ரியு‌ம், ‌ஒபாமாவுக்கு‌ம் உ‌ன்னை‌த் தெ‌ரியு‌ம், போ‌ப்புட‌னு‌ம் உன‌க்கு பழ‌க்க‌ம் இரு‌க்‌கிறது. இதெ‌ல்லா‌ம் பெ‌ரிய ‌விஷயமே இ‌ல்லை. ஆனா‌ல்........
‌நீ போ‌ப்புட‌ன் பா‌ல்க‌னி‌யி‌ல் தோ‌ன்‌றியது‌ம் அ‌ங்கு கூடி‌யிரு‌ந்த கூ‌ட்ட‌‌த்‌தி‌ல் இரு‌ந்த ஒருவ‌ன், எ‌ன்‌னிட‌ம்... யாருடா அது பா‌ல்க‌னி‌யி‌ல் பவர்ஸ்டார் கையை‌ப் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பது ‌எ‌ன்று கே‌ட்டா‌ன். அதை‌த் தா‌ன் எ‌ன்னா‌ல் தா‌ங்‌கி‌க் கொ‌ள்ள முடிய‌வி‌ல்லை" எ‌ன்று கூ‌றி ‌‌வி‌ட்டு ‌மீ‌ண்டு‌ம் மய‌க்கமானா‌ர்.

#பவர் ஸ்டாருனா சும்மா அதிரனும்ல...


Monday, April 1, 2013

குறட்டையை தடுக்க வழிகள்:-


நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை.

ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன.இந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை என்கிறோம்

காரணங்கள்:

நாம் தூங்கும் போது தலைக்கு வைத்து கொள்ளும் தலையணையை மிகவும் பெரிதாக உயரமாக வைத்துக் கொள்வதால் ஏற்படும். சில வகையான ஒவ்வாமை காரணமாக சுவாசக் குழாயில் ஏற்படும் சளி, சிலருக்கு உடல் பருமன் காரணமாகவும் குறட்டை ஏற்படுகிறது.

முழு தூக்கம் இருக்காது:

யாராவது குறட்டை விட்டு தூங்கினால் அவனுக்கென்ன நிம்மதியாக தூங்குகிறான் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் அது தவறு. குறட்டை விடுபவர் நன்றாக தூங்க முடியாது என்பதுடன் பல பாதிப்பு நிலைக்கும் தள்ளப்படும் நிலையும் வரலாம். குறட்டை விடுபவர் மனம் தெளிவாக இருக்காது.

உடல் மிகவும் களைப்பாக இருக்கும் உடலில் சக்தி குறைவாக இருக்கும். தெளிவற்ற சிந்தனை வரும். அதிகமாக கோபம் வரும். இதுமட்டுமின்றி உடலுக்கு போதிய அளவு பிராணவாயு கிடைக்காது. இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் பக்கவாதம் போன்ற நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

அத்தோடு மிக தீவிரமாக குறட்டை விடுபவர்கள் உறக்கத்திலேயே இறந்து விடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அதனால் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தவிர்க்க வேண்டியவை:

சுவாசப் பாதையில் தேவையின்றி சதை வளர்ந்தால் சீராக காற்று போக வழியின்றி குறட்டை ஏற்படலாம். எனவே சதை வளராமல் இருக்க உடல் எடையில் கவனம் வேண்டும். பக்க வாட்டில் படுக்க வேண்டும். 4 அங்குல உயரத்திற்கு மேல் தலையணை வைத்து தூங்க கூடாது.

சாப்பிட்ட உடன் படுக்க போக கூடாது. புகை பிடிக்க கூடாது. அளவுக்கு அதிகமான மருந்துகள் சாப்பிடக் கூடாது. மருந்து அருந்த கூடாது. அத்தோடு இதனால் பாதிக்கப்படுபவர்கள் தொண்டை மூக்கு, காது நிபுணரை அணுகி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

3 வகை நோயாளிகள்:

குறட்டையின் தீவிரத்தன்மையைப் பொறுத்து நோயாளிகளை 3 குழுக்களாக வகைப்படுத்தலாம்.

1. மெல்லிய குறட்டை- அடுத்திருக்கும் அறையில் ஒலியைக் கேட்க முடியும். மூச்செடுப்பதில் சிரமம் இல்லை.

2. உயரமான குறட்டை- கதவு மூடி இருந்தாலும் கூட அடுத்துள்ள அறையில் ஒலியைக் கேட்கலாம்.

3. உறங்கும் போது மூச்சுத் திணறுதல், நேரத்துக்கு நேரம், மூச்சு 10 வினாடிகளுக்கு மேலாக நிறுத்தப்படும்.


மாரடைப்பு அபாயம்:

7 மணி நேர நித்திரையின் போது 30 முறை மூச்சு திணறல் ஏற்பட்டால் இது ஆபத்தானதாக இருக்கலாம். பெருமூச்செடுத்த வண்ணம், நேரத்துக்கு நேரம் நோயாளி தூக்கம் கலையலாம்.

ரத்தத்தில் காணப்படும் குறைவான செறிவுடைய ஆக்சிஜன் இதயம், சுவாசப்பை மற்றும் மூளையை பாதிக்கலாம். ரத்த அழுத்தம் உயர்வடைவதால், மாரடைப்பு ஏற்படும்.

கட்டிலில் மரணம் கூட ஏற்படலாம். இந்த நோயாளிகள் பகலில் கூட நித்திரைத் தன்மையை, சோம்பேறித்தனத்தை உணர்வார்கள். டாக்டர் தூக்க வரலாற்றை சோதிக்கும் போது, இந்த பிரச்சினை பற்றி கூடுதலாக அறிந்த நோயாள ரின் துணையும் இருக்க வேண்டும்.

ஆபத்தான நோய்:

டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்சினைகள் ஏற்படும் போதோ சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்சினைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும். அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது.

கழுத்தைச் சுற்றி அளவுக்கு அதிகமான தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது. ஆபத்தான மருத்துவக் கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான, தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது கருதப் படுகிறது.

ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது கண்கள் வேகமாக அசையும், அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளியேறும். இதற்கு `அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே' என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு நேரத்திற்கு 18-க்கும் மேற்பட்ட முறை நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளிவருகிறது.

குறட்டை விடும் போது திடீரென நின்று திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால் நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து இதய அடைப்பு திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.

இந்தியாவில் அதிகம் பேர் பாதிப்பு:

இந்தியர்களில் பெரும்பாலோர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் வாழ்க்கை முறை மாறி விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

குறட்டை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து `ஸ்லீப் அப்னியே' நோய் உருவாகி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க தமிழகத்தின் பெரிய நகரங்களில் மருத்துவமனைகள் உள்ளன.

உங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதாப என்பதை அவர்கள் கண்டறிந்து விடுவர். காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர் நோயைக் குணப்படுத் திக்கொள்ளலாம். டான்சில் அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற பிரச்னைகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.


குறட்டையை குறைக்க:

ஆக்சிஜனை உடலில் தேவையான இடத்திற்கு எடுத்து செல் லும் வகையில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்து நம் மூக்கின் வழியே உடலுக்குச் செலுத்தும் இவற்றை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம்.

குறட்டையைக் குறைக்க மேலும் சில கருவிகள் விளம்பரப் படுத்தப்படுகின்றன. விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என பல வகைகள் உள்ளன. குறட்டை விடுபவரை, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு திருப்பி படுக்க வைத்தாலே குறட்டை ஒலி குறையும்.

ஸ்பைரோ மீட்டர் கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மை.

யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தினமும் 45 நிமிடம் யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடை பயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால் இளவயது பருமனைக் குறைக்கலாம். திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம். 


நன்றி; முக நூல் 

Monday, March 25, 2013

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?




1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.

2. மனது புண்படும்படி பேசக்கூடாது.

3. கோபப்படக்கூடாது.

4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.

5. பலர் முன் திட்டக்கூடாது.

6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.

7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.

8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.

10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.

12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.

13. வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச வேண்டும்.

14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.

15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.

17. ஒளிவு, மறைவு கூடாது.

18. மனைவியை நம்ப வேண்டும்.

19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.

20. மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.

21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.

22. தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.

23. உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.

24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.

25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.

26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் “இது உன் குழந்தை” என்று ஒதுங்கக்கூடாது.

27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும்.


நன்றி; முக நூல்

Sunday, March 24, 2013

பிறந்த நாள் பரிசு - சிறுகதை

இந்த இருபது வருஷமா ஒரு  வருஷம் கூட  தவறாம எங்க வீட்ல என் பிறந்த நாளுக்கு எங்க அப்பா நான் கேட்காமலே எனக்கு புது ட்ரெஸ் வாங்கி கொடுப்பாங்க. ஆனா நீங்க நான் வாங்கி கேட்டு கூட எனக்கு வாங்கி தர மாட்டேன்குறிங்க. என்னமோ கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆனா மாதிரி முழுசா மூன்று வருஷம் கூட முடியல்ல என சத்தம் போட்டவாறு அடுப்படியில் இருந்து டீ கொண்டவாறு வெளியே வந்தால் மகேஸ்வரி.

நான் என்ன உங்க வீட்டு வேலைகாரிய இருக்குற வேலை எல்லாம் நான் செய்யணும் ஆனா எனக்குன்னு எதுமே நீங்க செய்ய மாட்டிங்க? என்று கேட்டவாறு வரும் தன் மனைவியை நிமிர்ந்து பார்த்தான் கணவன் சிவா.

என்னடி காலைலேயே ஆரம்பிச்சுட்டியா நிம்மதியா பேப்பர் படிக்க விடுறியா சும்மா தொன தொனன்னு பேசிக்கிட்டு என்று டீயை எடுத்து குடிக்க ஆரம்பித்தான் சிவா.

பின்னே என்ன என் பிறந்த நாள் வருது எனக்கு ஒரு புடவை எடுத்து கொடுங்கன்னு சொன்னேனே என்ன ஆச்சு. அன்னைக்கு நம்ம சொந்தகாரங்க எல்லாத்தையும் கூப்பிட்டு விருந்து வைக்கணும்னு சொன்னேன். உங்கள்ட இருந்து இன்னும் அதுக்கு பதில் வரல்ல என்றால் மகேஸ்வரி.

 நாம என்ன அம்பானி குடும்பமா? பிறந்த நாள் கொண்டாட என்றான்.

அம்பானி மாதிரி ஒன்னும் பெரிய அளவு விருந்து வைக்க சொல்லல அவரு மாதிரி சொகுசு கப்பல் வாங்கி தரவும் சொல்லல தங்க செயினு வைர மோதிரம் கேட்கல நம்ம வசதிக்கு ஏத்த மாதிரி ஒரு புடவை எடுக்கலாம்ல?

அடியே புடவை ஒன்னு எடுக்குறது பிரச்னை இல்லை ஆனா அங்க போன ஒரு நாளுல ஆகும். அதும் இல்லாம இப்ப இருக்குற விலைவாசிக்கு நம்ம விருந்து அது இதுன்னு தேவை இல்லாத செலவு இப்பவே குடும்பத்துக்கு என்னனென செலவு ஆகுது தெரியுமா?

இல்லாத மின்சாரத்துக்கு ஆயிரம் ஓவா ஆகுது. முன்னலாம் பத்து ரூபாய்க்கு காய்கறி வாங்க போன போதும் இப்ப அப்டியா இருக்கு. பெட்ரோல் என்னமா விலை ஏறி போச்சு நம்ம நாடு இருக்குற நிலைமைல இதெல்லாம் தேவையா என்று நொந்து கொண்டான்.
அன்று முழுவதும் புலம்பலிலேயே முடிந்தது. இரவு சாப்பிட்டு விட்டு கவலையாய் படுத்து கொண்டால் மகேஸ்வரி. அவனும் சாப்பிட்டு விட்டு படுத்து விட்டான். விடிஞ்சா பிறந்த நாள் கல்யாணம் ஆனாலே அவ்வளவு தான் போல என்று எண்ணியவாறு உறங்கிவிட்டாள்.

11.59...
........
........
.......
........
.......
......
......
12.00

மகேசு?மகேசு? கணவனின் சத்தம் கேட்கவே என்னங்க என எழுந்திரித்தால்.
கையில் பரிசுடன்  சிவா. என் அன்பு மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றவாறு அதை கொடுக்க பிரித்து பார்த்தால் புடவை இருந்தது. 
எப்பங்க வாங்குனிங்க என்றால் ஒரு வாரத்துக்கு முன்னமே வாங்கி வச்சுட்டேன் என்றான். மகேஸ்வரியின்  கண்களில் சந்தோசதின் துளி. 

அங்கு இருந்தது ஆடம்பரமான சொகுசு கப்பலோ வைர  மோதிரமோ பெரிய பரிசு பொருளோ  அல்ல. விலை மதிப்பில்லாத அன்பு மட்டுமே!


Saturday, March 23, 2013

புத்திசாலித்தனம்...!




ஒரு விவகாரமான புத்திசாலி வேகமாக கார் ஓட்டியதற்காக டிராபிக் போலிஸ் நிறுத்தினார்.......

புத்திசாலி : என்ன சார்?

போலிஸ் : ஓவர் ஸ்பீட்?

புத்திசாலி : சார், சாரி. இனிமே இப்படி ஓட்ட மாட்டேன்.

போலிஸ் : லைசென்ஸ் எடுங்க.

புத்திசாலி : சார், லைசென்ஸ் இல்ல.

போலிஸ் : லைசென்ஸ் இல்லையா?

புத்திசாலி : நாலு வருஷம் முன்னாடி குடிச்சுட்டு வண்டி ஓட்டும் போது அதை போலிஸ் ரத்து செய்ஞ்சுட்டாங்கோ
.
போலிஸ் : வண்டியோட இன்சூரன்ஸ், RC எடுங்க.

புத்திசாலி : அதுவும் இல்ல.

போலிஸ் : என்ன?

புத்திசாலி : இப்போதான் இந்த கார திருடிட்டு வாரேன்.

போலிஸ் : இது திருட்டு வண்டியா?

புத்திசாலி :ஆமா, இந்த கார் ஓனர் என்ன திட்டுனான் அதான் அவன கொன்னுட்டு வண்டிய எடுத்துட்டு வந்துட்டேன்.

போலிஸ் : கொன்னுட்டயா? அவர் பாடிய என்ன பண்ணுன?

புத்திசாலி : பாடி டிக்கில இருக்கு பாக்குறீங்களா....

பயந்துபோன போலிஸ் தன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கூற அவர்கள் 15 நிமிடங்களில் அங்கு வருகின்றனர்.

உயர் அதிகாரி : வண்டில இருந்து இறங்கு.

புத்திசாலி : பிரச்சனையா சார்?

உயர் அதிகாரி : நீங்க கொலை செய்ஞ்சு இந்த கார திருடீடு வந்துடீங்கலாமே?

புத்திசாலி : கொலையா?

உயர் அதிகாரி : ஆமா. டிக்கிய தொறங்க.

புத்திசாலி திறக்கிறார்.உள்ளே பிணம் இல்லை.

உயர் அதிகாரி : இது யார் கார்?

புத்திசாலி : என்னோடதுதான். இந்தா பாருங்கோ RC, இன்சூரன்ஸ் எல்லாம் என் பேருலதான் இருக்கு.

உயர் அதிகாரி : உங்க லைசென்ச காட்டுங்க.

புத்திசாலி அதையும் காட்டினார்.அதிகாரி முகத்தில் குழப்பம்.

உயர் அதிகாரி : மன்னிச்சுருங்க.நீங்க இந்த கார் ஓனர கொன்னுட்டு வண்டிய திருடி வந்துடிங்கனு உங்கள பிடிச்ச டிராபிக் போலிஸ்காரர் பொய்த்தகவல் சொல்லிட்டார்.நீங்க போகலாம்.

புத்திசாலி : அவர் நான் வண்டிய வேகமா ஓட்டுனேன்னு பொய் சொல்லலையா? 


நன்றி;முக நூல்