Monday, March 25, 2013

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?




1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.

2. மனது புண்படும்படி பேசக்கூடாது.

3. கோபப்படக்கூடாது.

4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.

5. பலர் முன் திட்டக்கூடாது.

6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.

7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.

8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.

10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.

12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.

13. வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச வேண்டும்.

14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.

15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.

17. ஒளிவு, மறைவு கூடாது.

18. மனைவியை நம்ப வேண்டும்.

19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.

20. மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.

21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.

22. தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.

23. உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.

24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.

25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.

26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் “இது உன் குழந்தை” என்று ஒதுங்கக்கூடாது.

27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும்.


நன்றி; முக நூல்

Sunday, March 24, 2013

பிறந்த நாள் பரிசு - சிறுகதை

இந்த இருபது வருஷமா ஒரு  வருஷம் கூட  தவறாம எங்க வீட்ல என் பிறந்த நாளுக்கு எங்க அப்பா நான் கேட்காமலே எனக்கு புது ட்ரெஸ் வாங்கி கொடுப்பாங்க. ஆனா நீங்க நான் வாங்கி கேட்டு கூட எனக்கு வாங்கி தர மாட்டேன்குறிங்க. என்னமோ கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆனா மாதிரி முழுசா மூன்று வருஷம் கூட முடியல்ல என சத்தம் போட்டவாறு அடுப்படியில் இருந்து டீ கொண்டவாறு வெளியே வந்தால் மகேஸ்வரி.

நான் என்ன உங்க வீட்டு வேலைகாரிய இருக்குற வேலை எல்லாம் நான் செய்யணும் ஆனா எனக்குன்னு எதுமே நீங்க செய்ய மாட்டிங்க? என்று கேட்டவாறு வரும் தன் மனைவியை நிமிர்ந்து பார்த்தான் கணவன் சிவா.

என்னடி காலைலேயே ஆரம்பிச்சுட்டியா நிம்மதியா பேப்பர் படிக்க விடுறியா சும்மா தொன தொனன்னு பேசிக்கிட்டு என்று டீயை எடுத்து குடிக்க ஆரம்பித்தான் சிவா.

பின்னே என்ன என் பிறந்த நாள் வருது எனக்கு ஒரு புடவை எடுத்து கொடுங்கன்னு சொன்னேனே என்ன ஆச்சு. அன்னைக்கு நம்ம சொந்தகாரங்க எல்லாத்தையும் கூப்பிட்டு விருந்து வைக்கணும்னு சொன்னேன். உங்கள்ட இருந்து இன்னும் அதுக்கு பதில் வரல்ல என்றால் மகேஸ்வரி.

 நாம என்ன அம்பானி குடும்பமா? பிறந்த நாள் கொண்டாட என்றான்.

அம்பானி மாதிரி ஒன்னும் பெரிய அளவு விருந்து வைக்க சொல்லல அவரு மாதிரி சொகுசு கப்பல் வாங்கி தரவும் சொல்லல தங்க செயினு வைர மோதிரம் கேட்கல நம்ம வசதிக்கு ஏத்த மாதிரி ஒரு புடவை எடுக்கலாம்ல?

அடியே புடவை ஒன்னு எடுக்குறது பிரச்னை இல்லை ஆனா அங்க போன ஒரு நாளுல ஆகும். அதும் இல்லாம இப்ப இருக்குற விலைவாசிக்கு நம்ம விருந்து அது இதுன்னு தேவை இல்லாத செலவு இப்பவே குடும்பத்துக்கு என்னனென செலவு ஆகுது தெரியுமா?

இல்லாத மின்சாரத்துக்கு ஆயிரம் ஓவா ஆகுது. முன்னலாம் பத்து ரூபாய்க்கு காய்கறி வாங்க போன போதும் இப்ப அப்டியா இருக்கு. பெட்ரோல் என்னமா விலை ஏறி போச்சு நம்ம நாடு இருக்குற நிலைமைல இதெல்லாம் தேவையா என்று நொந்து கொண்டான்.
அன்று முழுவதும் புலம்பலிலேயே முடிந்தது. இரவு சாப்பிட்டு விட்டு கவலையாய் படுத்து கொண்டால் மகேஸ்வரி. அவனும் சாப்பிட்டு விட்டு படுத்து விட்டான். விடிஞ்சா பிறந்த நாள் கல்யாணம் ஆனாலே அவ்வளவு தான் போல என்று எண்ணியவாறு உறங்கிவிட்டாள்.

11.59...
........
........
.......
........
.......
......
......
12.00

மகேசு?மகேசு? கணவனின் சத்தம் கேட்கவே என்னங்க என எழுந்திரித்தால்.
கையில் பரிசுடன்  சிவா. என் அன்பு மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றவாறு அதை கொடுக்க பிரித்து பார்த்தால் புடவை இருந்தது. 
எப்பங்க வாங்குனிங்க என்றால் ஒரு வாரத்துக்கு முன்னமே வாங்கி வச்சுட்டேன் என்றான். மகேஸ்வரியின்  கண்களில் சந்தோசதின் துளி. 

அங்கு இருந்தது ஆடம்பரமான சொகுசு கப்பலோ வைர  மோதிரமோ பெரிய பரிசு பொருளோ  அல்ல. விலை மதிப்பில்லாத அன்பு மட்டுமே!


Saturday, March 23, 2013

புத்திசாலித்தனம்...!




ஒரு விவகாரமான புத்திசாலி வேகமாக கார் ஓட்டியதற்காக டிராபிக் போலிஸ் நிறுத்தினார்.......

புத்திசாலி : என்ன சார்?

போலிஸ் : ஓவர் ஸ்பீட்?

புத்திசாலி : சார், சாரி. இனிமே இப்படி ஓட்ட மாட்டேன்.

போலிஸ் : லைசென்ஸ் எடுங்க.

புத்திசாலி : சார், லைசென்ஸ் இல்ல.

போலிஸ் : லைசென்ஸ் இல்லையா?

புத்திசாலி : நாலு வருஷம் முன்னாடி குடிச்சுட்டு வண்டி ஓட்டும் போது அதை போலிஸ் ரத்து செய்ஞ்சுட்டாங்கோ
.
போலிஸ் : வண்டியோட இன்சூரன்ஸ், RC எடுங்க.

புத்திசாலி : அதுவும் இல்ல.

போலிஸ் : என்ன?

புத்திசாலி : இப்போதான் இந்த கார திருடிட்டு வாரேன்.

போலிஸ் : இது திருட்டு வண்டியா?

புத்திசாலி :ஆமா, இந்த கார் ஓனர் என்ன திட்டுனான் அதான் அவன கொன்னுட்டு வண்டிய எடுத்துட்டு வந்துட்டேன்.

போலிஸ் : கொன்னுட்டயா? அவர் பாடிய என்ன பண்ணுன?

புத்திசாலி : பாடி டிக்கில இருக்கு பாக்குறீங்களா....

பயந்துபோன போலிஸ் தன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கூற அவர்கள் 15 நிமிடங்களில் அங்கு வருகின்றனர்.

உயர் அதிகாரி : வண்டில இருந்து இறங்கு.

புத்திசாலி : பிரச்சனையா சார்?

உயர் அதிகாரி : நீங்க கொலை செய்ஞ்சு இந்த கார திருடீடு வந்துடீங்கலாமே?

புத்திசாலி : கொலையா?

உயர் அதிகாரி : ஆமா. டிக்கிய தொறங்க.

புத்திசாலி திறக்கிறார்.உள்ளே பிணம் இல்லை.

உயர் அதிகாரி : இது யார் கார்?

புத்திசாலி : என்னோடதுதான். இந்தா பாருங்கோ RC, இன்சூரன்ஸ் எல்லாம் என் பேருலதான் இருக்கு.

உயர் அதிகாரி : உங்க லைசென்ச காட்டுங்க.

புத்திசாலி அதையும் காட்டினார்.அதிகாரி முகத்தில் குழப்பம்.

உயர் அதிகாரி : மன்னிச்சுருங்க.நீங்க இந்த கார் ஓனர கொன்னுட்டு வண்டிய திருடி வந்துடிங்கனு உங்கள பிடிச்ச டிராபிக் போலிஸ்காரர் பொய்த்தகவல் சொல்லிட்டார்.நீங்க போகலாம்.

புத்திசாலி : அவர் நான் வண்டிய வேகமா ஓட்டுனேன்னு பொய் சொல்லலையா? 


நன்றி;முக நூல்